கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில், இந்தியாவின் பாண்டியா ஓவரை வீச, இந்த ஓவரில் 2 பவுண்டரிகள் பறக்க அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்களும் விழ கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் பெற்றால் பங்களாதேஷிற்கு வெற்றி என்ற நிலையில், ஒரு ஓட்டத்தையேனும் பெற்றுக்கொண்டால் போட்டியை சமநிலையில் முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், பந்து மட்டையில் படாமலேயே சுவக்தா ஓட, சிறப்பாக செயற்பட்ட டோனி ரன் அவுட் மூலம் முஸ்தபிஸுரை ஆட்டமிழக்கச் செய்து 2 ஓட்டங்களால் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இருபதுக்கு 20 தொடரில் மிக வும் பரபரப்பாக நடந்த போட்டி இதுதான் என்றுகூட சொல்லாம். கடைசிவரை போராடி வந்த பங்களாதேஷ் அணி 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி பெரும் ஏமாற்
றமடைந்தது. இந்த வெற்றியுடன் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. பங்களாதேஷ் அணிக்கோ தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதுவரை ஒரு
தோல்வி ஒரு வெற்றியை பெற் றுள்ள இந்திய அணி முன்னேற வெற்றி அவசியம் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. அதே நேரம், தொடரிலிருந்து வெளி யேறுவதை தவிர்த்துக்கொள்ள களமிறங்கியது பங்களாதேஷ் அணி. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைக் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷர்மாவும், தவானும் நிதானமாக ஆடினார்கள். இதனால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை ஆமை வேகத்தில் நகர்ந்தது. 6 ஓவர்களில் ரோஹித்தும், தவானும் ஆளுக்கு ஒரு சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். தவானும் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இந்திய அணி தரப்பில் ரெய்னா 30 ஓட்டங்களையும், கோஹ்லி, தவான் முறையே 24,23 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி இந்திய வீரர்களை திணறடித்தனர்.
இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது.
147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று 2 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதில் தமிம் இக்பால்(35), ரஹ்மா(26), ஷகிப் அல் ஹசன் (22) வீதம் ஓட்டங்களைப் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM