முஸ்லிம்களின் குடியேற்றங்களினால் வன்னிமக்களின் தமிழ்மண் பறிபோய்க்கொண்டிருக்கின்றது என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் மாவட்ட தலமை காரியாலயம் அதன் தலைவர் பிரபாகணேசனால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மக்கள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர் வி.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கட்சியின் தலைவர் பிரபா கணேசன் மற்றும் கட்சியின் தேசிய இணைப்பாளர் டி.வை.பிரசாத் மாவட்ட இணைப்பாளர் மாதவராசா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தொழில் அதிபர் தெய்வேந்திம் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மாவட்ட அலுவலகம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வில் சிறப்புரையினை ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் வன்னியில் முல்லைத்தீவு, வவுனியா மன்னார் மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலை மிக மோசமாகவுள்ளது.
கிராமங்களில் சென்று மக்களை பார்க்கின்ற பொழுது ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டமான நிலையில் உள்ளனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுநீரக பிரச்சினை, வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்த மக்களிடம் இருக்கின்றன.
இவை தீர்க்கப்படுமாக இருந்தால் நேர்மையான ஊழல் அற்ற திறமையான பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இந்த மண்ணுக்கு தேவைப்படுகின்றார்கள்.
குறித்த மண்ணில் கடந்த 15 ஆண்டு காலமாக எந்த ஒரு தமிழ் அமைச்சர்களும் இங்கு இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
அதுமட்டுமல்ல அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் நிதிகள் சரியான முறையில் உள்வாங்கப்பட்டு மக்களுக்கான தேவையினை முன்னெடுக்கவில்லை என்பதும் கவலைக்குரியவிடயமாக இருக்கின்றது.
ஏன் என்றால் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகிய எவருமே தமிழ்மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்கப்போவதில்லை என்பதில் நாம் உறுதி கொள்ளவேண்டும்.
அரசியல் தீர்வினை அவர்கள் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
சிங்களவர்களின் மொத்த வாக்குகளை அவர்கள் இழக்க தவறுவதால் தமிழ் மக்களுக்கான தேவைகளையும் அரசியல் தீர்வினையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் தமிழர்கள் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியாத நிலை இருக்கின்றது.
அந்த அடிப்படையில் இங்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு பெற்று மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விடயமாக நான் பாக்கின்றேன்.
சிரித்தபடி கேட்டுவாங்கக்கூடிய விடயங்களை சிரித்தபடியும், சண்டையிட்டு கேட்டு வாங்கக்கூடிய விடயங்களை சண்டையிட்டு வாங்கியும் எமது மக்களுக்கு தேவையானவற்றை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் இதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
அந்த அடிப்படையில் இங்கு கஷ்டப்படும் மக்களுக்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடாக முழுமையான ஒரு சேவையினை நான் செய்வதற்கு கடைமைப்பட்டுள்ளேன்.
இன்று மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்கிறார்கள். நான் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை குறை கூற விரும்பவில்லை தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் உரிமையினை பெற்றுதருவோம் என்றுதான் மக்களிடம் வாக்குகளை வாங்கியுள்ளார்கள்.
அபிவிருத்தி அல்ல ஆகவே அவர்கள் உரிமையினை நூறு ஆண்டுகளுக்கு பிறகாவது தேடி கண்டுபிடித்துக் கொடுக்கட்டும் அதுவரை எமது மக்களின் வாழ்க்கை இல்லாமல் போகச்செய்ய முடியாது ஆகவே அபிவிருத்தி எமக்கு தேவையாக இருக்கின்றது.
உரிமையும் அபிவிருத்தியும் என்ற தண்டவாளத்தினை போன்று சமச்சீராக செல்லவேண்டும். அப்படி சென்றால்தான் எமது மக்களுக்கான தீர்வினை நாம் சரியான முறையில் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் ஆகவே எமது மக்களுக்கு தேவையான வீட்டுத்திட்டத்தை முதலில் செய்துகொடுக்கவேண்டிய கடமைப்பாடு எங்களிடம் இருக்கின்றது.
அந்த அடிப்படையில் வன்னிமாவட்ட மக்களின் எதிர்கால சுபீட்ச வாழ்க்கைக்காக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உறுதியுடன் செயற்படும். வன்னிமாவட்டத்தில் தமிழ் அமைச்சர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் அபிவிருத்திகள் எமது தமிழ்மக்களுக்கு கிடைக்காமல் போகின்றமையினை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.
வன்னிமாவட்டத்தில் அடிமட்டத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களிடம் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அமைச்சர்களாக பதவி ஏற்ற பின்னர் தமது சமூகத்திற்குதான் கருணை காட்டுகின்றார்கள்.
முஸ்லிம் வீட்டுத்திட்டங்களுக்கு சென்றால் அழகான வீடுகள், வீதிகள் ,மசூதிகள் கடைத்தொகுதிகள் கட்டப்பட்டு முழுமையான கிராமமாக அந்த வீட்டுத்திட்டங்கள் காட்சியளிக்கின்றன.
எமது வீட்டுத்திட்டங்களை பார்க்கும் போது மிக மோசமான நிலையில் இருக்கின்றன. எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது சமூகத்தினையே முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனைவிடவேறு மாவட்டங்களில் இருந்து குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இருந்து முஸ்லிம் குடும்பங்களை குடியேற்றி முஸ்லிம் குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் வன்னி மக்களின் தமிழ் மண் பறிபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
முல்லைத்தீவு நகரத்தில் முஸ்லிம் குடியேற்றம் வவுனியா நகரத்தில் முஸ்லிம் குடியேற்றம் இவை இல்லாது ஒழிக்கப்படவேண்டும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவனாக நான் செயற்படவில்லை முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தும் முஸ்லிம் அரசியல் வாதிகளை அமைச்சர்களுக்கு எதிராக செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் தமிழர்கள் தமிழர்களுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்ற சிந்தனையினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM