கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுப்படி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும் என துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
“கஜா புயலானது நம் தலைமுறை காணாத அளவிற்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணிகளையும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.
பசுமைவழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது வேறு.
கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது என்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சேதங்களைப் பார்வையிடுவதற்கு மத்திய குழு இன்று வருகைத்தருகிறது. மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவு எடுக்கும்.” என்றார்.
முன்னதாக புதுகோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளை பார்வையிட்டார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM