2015 ஆம் ஆண்டு 17 இலட்சத்து 43 ஆயிரத்து 601 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன்களாகப் பெறப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் 7.71 சதவீத வருடாந்த வட்டிக்கு 9 இலட்சத்து 65 ஆயிரத்து 449 மில்லியன் ரூபா உள் நாட்டுக் கடனும் 3.8 சதவீத வருடாந்த வட்டிக்கு 4 இலட்சத்து 22 ஆயிரத்து 543 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனும் பெறப்பட்டிருந்தது.
2015 ஆம் ஆண்டில் 7.48 சதவீத வருடாந்த வட்டிக்கு 11 இலட்சத்து 87 ஆயிரத்து 231 மில்லியன் ரூபா உள்நாட்டுக்கடனையும் 4.8 சதவீத வருடாந்த வட்டிக்குக் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 370 மில்லியன் ரூபா வெளி நாட்டு கடனை அரசாங்கம் பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் பாராளுமன்றத்துக்குத் தெரியாமல் பெறப்பட்ட கடன்களை திருப்பிச்செலுத்துவதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் அதிக கடன்களை பெறவேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்தி த்தே செயற்பட்டு வருகின்றது. ஆகவே கடந்த அரசாங்கத்தையொத்த வகையில் எதேச்சாதிகாரப்போக்கில் கடன்களை பெற வில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM