ஒன்றிணைந்த எதிரணியின் எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதன் மூலம் இனவாத சிங்ஹ லே அமைப்பினர் யார் என்பது நாட்டுமக்களுக்கு தோல் உரித்துக் காட்டப்பட்டுள் ளது. இனவாதத்தின் மூலம் நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஐரோப்பியர்கள் இன்று நிம்மதியாக தங் கள் அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்கு எப்போது குண்டுகள் வெடிக்கும் என்று தெரியாது அச்சத்துடன் வாழ்கின்றனர். பிரஸல்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் முழு ஐரோப்பிய நாடுகளும் பீதிக்கு ஆளாகியுள்ளன.
ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாகுவத ற்கு பிரதான காரணம் அமெரிக்காவாகும். அமெரிக்கா அரபு நாடுகளின் வளங்களை சூறையாடுவதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கு தாக்குதல்களை நடத்தியிருந்தது. அத்துடன் தற்போது சிரியாவுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டுக்குள்ளே மோதல் இடம்பெறுவதால் நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றர்.
இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாகின. அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களைக்கொண்டே ஐ.எஸ். தாக்குதல்களை மேற்கொள்கின்றது. தற்போது அமெரிக்காவிலும் இனவாதம், மதவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டரம், தான் தேர்தலில் வெற்றிபெற்றால் அங்கிருக்கும் சிறுபான்மை இனத்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக தெரிவித்துள் ளார்.
இதன் மூலம் இதுவரைகாலமும் ஏனைய நாடுகளின் ஜனநாயகம் தொடர்பில் குறை கூறிவந்த அமெரிக்காவுக்கு தற்போது அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால் டரம் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் பாரிய அழிவு ஏற்படும்.
அதேபோன்றே எமது நாட்டிலும் இனவா தத்தை தூண்டி ஆட்சியை கைப்பேற்ற லாம் என சிலர் இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இவர் கள் யார் என்பது தற்போது நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டத்தில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எவரையும் மேடையில் நிறுத்தவில்லை. அத்துடன் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் உரையாற்றவும் இல்லை. அப்படியானால் சிங்ஹ லே என்று சொல்லக்கூடியவர்கள் நாங்கள் தான் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.
அத்துடன் இவர்கள் இராணுவத்தினர் பிக்குமார் மற்றும் அரச துறைகளில் சிலரையும் இணைத்துக்கொண்டு சதித்திட்டங்கள் தீட்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என நினைக்கின்றனர். இவர்களின் எதிர்ப்பு கூட்டத்துக்கு கொழும்பில் இருந்து சென்றவர்களை விட தென்பகுதியில் இருந்து பஸ்களில் அழைத்து வந்தவர்களே இருந்தனர்.
கடந்த அரசாங்கத்தில் இருக்கும்போது கொள்ளையிடப்பட்ட பணம் தான் இதற் கெல்லாம் செலவழிக்கப்படுகிறது. அவர் கள் திருடிய பணத்தை அரசாங்கத்து க்கு இது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின் றது. இவர்களின் மோசடிகள் தொடர்பிலும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியிலேயே உள்ளன. அத னால்தான் இவர்கள் தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு மீண்டும் ஆட் சியை கைப்பற்றலாம் என நினைத்து செயற் படுகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM