.இந்தியாவில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பன்னிரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் 15,000 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுதில்லியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
“தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் 15,000 கோடி நிதி கோரப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முதல் கட்டமாக 1500 கோடி ரூபாயை இடைக்கால நிவாரணமாகவும் கேட்டுள்ளோம்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய ஆய்வுக்குழுவினரை அனுப்புமாறு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மத்திய ஆய்வு குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM