உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் 'எமது எதிர்காலம் எமது கையில்' எனும் தொனிப்பொருளில் உலக மீனவர் தினம் இன்று புதன் கிழமை (21) பூநகரியில் கொண்டாடப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களை மையப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதார வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வானது இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச சபைக்கு உற்பட்ட தனியார் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக வடமாகாண நீரியல் வளதுறை உதவி இயக்கினர் நிருபராஜ்,யாழ் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் திருமதி.சுரேஸ் புளோரிடா மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , கிரம அலுவலகர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கடலினை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில் ஈடுபடும் குறிப்பாக அட்டைபிடித்தல், இறால் , நண்டு , கரைவலை, வீச்சு வலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு குழுக்களாக சிறப்பாக இயங்கி வரும் ஆண் மற்றும் பெண்களும் மீனவர் குழுக்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM