யாழ்ப்பாணத்தில், இணுவில் பகுதியில் தந்தையினால் மகனுக்கு நடந்த கொடூரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போதை தலைக் கேறிய தந்தையொருவர், தனது ஐந்து வயது மகனை பற்பல இடங்களில் கொடூரமாக கடித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். மேலும் சிறுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.
சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு, தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து, சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசரணைகளின் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM