ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில்,
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே அதற்கான நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டார். அரசியல் யாப்பின் 37.2 ஆவது சரத்தின் படி ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்றாத பட்சத்தில் பிரதம நீதியரசரின் துணையுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாடு சபாநாயகருக்கு உரித்தாக்கப்படும் என்ற ஏற்பாடு சபாநாயகரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் இயலாமை தொடர்பாக பெரும்பான்மை கருத்தை அறியுமாறும் பிரதம நீதியரசரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த கடிதம் தொடர்பாக சபாநாயகர் காரியாலயம் விடுத்துள்ள மறுப்புச் செய்தியில் ,
அவ்வாறானதொரு கடிதம் அவசியமில்லை, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சபாநாயகரே ஒரே அதிகாரம் மிக்கவர் என அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தி எங்கிருந்து? யார்? அனுப்பியது தொடர்பாக எந்த விடயமும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் சபாநாயகர் பிரதம நீதியரசருக்கு கடிதம் எழுதியதாக வைரலாக பரவியுள்ளதாக அறிய கிடைத்தது. என குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM