ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எரிக் சொல்ஹெய்ம் அதிகாரபூர்வ பயணங்களுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை சுற்றுச் சூழல் அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டடுள்ளது.
மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.
இந் நிலையிலேயே ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
63 வயதையுடைய எரிக் சொல்ஹெய்ம் நோர்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் என்பதுடன் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM