வீடு ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சூனிய கடவுளுக்குரிய கோவிலை உடைத்தநிலையில், குறித்த கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டினுள் ஆங்காங்கு மர்மமான முறையில் தீப்பற்றுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் வென்னப்புவ லுனுவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கோவிலை உடைத்த பின்னரே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தானாபுர பிரதேசத்தில் 7ஏ, இல.109 இல் அமைந்துள்ள கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டின் உரிமையாளர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் , இந்நிலையில் குறித்த வீட்டை மற்றுமொரு குடும்பத்தினருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளனர்.
வாடகைக்கு குடியேரியவர்கள் வீட்டின் அருகில் சூனியக்கடவுளுக்கு சிறிய கோவில் ஒன்றை அமைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.
இதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் குறித்த கோவில் தமது ஆகமத்துக்கு எதிரானது எனவும் இதனால் கோவிலை உடைக்குமாறும் கோரி பலவந்தமாக உடைத்து அதனை அகற்றியுள்ளார்.
இதனையடுத்தே குறித்த வீட்டினுள்ள இவ்வாறான மர்ம சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நேற்று முன்தினம் சமைப்பதற்காக அரிசியை கையில் எடுத்த போது அரிசி திடீரென தீப்பற்றிக்கொண்டுள்ளதாகவும் குறித்த வீட்டில் உள்ள பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு நாளைக்கு பத்து தடவைகளுக்கு மேல் இவ்வாறு தீப் பற்றிகொள்வதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM