வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு பிரதேசத்தில் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக சென்றிருந்த மேசன் ஒருவர் வேலைக்கு அழைத்துச்சென்ற சகமேசனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஓமடியாமடு,ரெதிதன்ன பகுதியில் வசித்துவந்த 53வயதுடைய பாலிபோடி உதயகுமார் என்ற மேசனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
சம்பவ தினமான அன்று தாக்குதலுக்குள்ளாகிய குறித்த மேசன் தமது சொந்த ஊரான அதேபகுதியிலேயே கட்டட நிர்மாணப்பணி ஒன்றுக்காக அதேபகுதியைச்சேர்ந்த மற்றொரு மேசனால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
அங்கு வேலைசெய்ததன் பின்னர் தனது நாட்கூலியை அதிகரித்துக்கேட்கவே, அழைத்துச்சென்ற சகமேசன் தரையிலிருந்த மண்வெட்டியைத்தூக்கி தலையில் அடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயங்களுக்குள்ளாகிய குறித்த மேசன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM