இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட் உற்பட வீரர்கள் பலர் பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது பெரிய மடு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடவே குறித்த குழுவினர் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
இங்கிலாந்து அரசின் நிதி உதவியுடன் 'மெக்' என்ற கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு காட்டுப் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த அணி வீரர்களை மன்னாருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM