முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் தலையீடுகள்;இடம்பெறுவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்த நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளமை குறித்தே மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தயாகி ருவன்பத்திர இதனை தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணாமல்போதல்கள் உட்பட முக்கிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளில் தலையீடுகள் இடம்பெறுவதாக தோற்றம் ஏற்பட்டுள்ளமை குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதும் இடம்பெறும் விசாரணைகளில் எந்த காரணத்திற்காகவும் முட்டுக்கட்டை நிலை ஏற்படாமலிருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவங்களிற்கான நீதி மிகநீண்டகாலமாகவே வழங்கப்படாமலுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM