(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விஜேராம இல்லத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கு ஹெலிகொப்டரை பயன்படு பயன்படுத்துகின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் சட்டவிரோதமான பிரதமர் நியமனத்தினால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணி 2 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலிருந்து கிடைக்க வேண்டிய 700 பில்லியன் அமெரிக்க டொலர் என்பவை நிறுத்தப்பட்டுள்ளது.
இது எமது நாட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தும். இவர்களது கையில் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றால் நாடு இவ்வாறு தான் செல்லும்.
எனவே இவ்வாறு காலத்தை வீணடிக்காது மீதமிருக்கும் ஒன்றரை வருடங்கள் ஆட்சியை தொடர இடமளித்து தேர்தலுக்கு செல்வதே சிறந்ததாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் பிரதி சபாநாயகரினால் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM