(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் வெள்ளிக்கிழமை அதனை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க , மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை சட்டப்பூர்வமற்ற கலைக்கப்பட்ட ஒன்று என்பது உறுதிப்பட்ட விடயம் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சம்பிக ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. எனவே பாராளுமன்றத்தில் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவில் பெரும்பாண்மை எமக்கு வழங்கப்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை கலைக்கப்பட்டதாக சபாநாயகர் கரு கருஜயசூரிய கடந்த 15 ஆம் திகதி அறிவித்தார்.
இதனை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பெயர் மூலம் அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மயை நிரூபிக்க வேண்டும். மேலும் அதனை நிலையியற்கட்டளைக்கேற்ப நிரூபிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM