வியட்நாமில் மண்சரிவு : 13 பேர் பலி

Published By: Digital Desk 4

19 Nov, 2018 | 03:49 PM
image

வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக  ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதோடு பலர் மாயமாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வியட்நாமில் கடந்த சில வாரமாகக் கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாகப் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் ரிசார்ட் நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் மண்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான பகுதிகளில் மண்சரிவில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்க 600 க்கும் மேற்பட்ட  இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மீட்புப் பணி முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் என்றும்,  மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் புயல் காரணமாக வியட்நாமில் ஏற்படும் மண்சரிவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் அதிகமான மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34