ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வுவனியா நகரசபை பொது சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் இன்றுக்காலை ஈடுபட்டனர். இலங்கைதேசியஅரச பொது ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் நகரசபையின் சில சுகாதாரத்தொழிலாளர்கள்பங்கேற்காது நகரசபை வளாகத்தில் இருந்து கடமைக்காக வாகனங்களை எடுத்து செல்லமுற்பட்டபோது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை வெளியில் கொண்டு செல்லமுடியாதவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைஅடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் நகரசபை தலைவர்செயலாளர் உடன்கலந்துரையாடியதுடன் இதற்கானசரியான தீர்வை நாளை நகரசபைதரும் என்ற உறுதி மொழியை பொலிஸார் தெரிவித்ததையடுத்துஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
சம்பள மறுசீரமைப்பானது அரசநிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக செய்யப்படவேண்டும். உள்ளக வெற்றிடங்கள் அந்த வேலைப்பகுதியில் வேலை செய்யும்ஊழியர்களை கொண்டு நிரப்பப்படவேண்டும்.
தனியார்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காவல் கடமைகளை நிறுத்தி எமது ஊழியர்கள் பதவி உயர்வாக அதனை வழங்கவேண்டும் சுகாதாரதொழிலாளர்களுக்காக இடம் மற்றும் மலசலகூடம் அமைத்துதர வேண்டும் வவுனியா நகரசபையில் மூன்று இலட்சம் பெறுமதியானமரங்கள் கடத்தப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM