கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருக்கிறார்.
இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ் குணவர்தனவினால் புதிய தெரிவுக்குழுக்களை உருவாக்குவது அல்லது ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைக்குமாறு தெரிவிக்கப்பட்டபோதும், இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
அரசாங்கம் பெரும்பான்மையினை இழந்து காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தெரிவுக்குழுக்களை ஸ்தாபிக்க முடியாது எனக் கூறியே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதேவேளை, பாராளுமன்ற தளபாடங்களை சேதப்படுத்தியமை குறித்து விசாரிக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கையொன்றை விடுத்திருந்ததார்.
எவ்வாறாயினினும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய அதற்கான பெயர் விபரங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM