அப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய நகரங்களில் மூன்று முக்கிய வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்களும் பணமும் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக அப்புத்தளை தியத்தலாவை பொலிஸார் திருடர்களை தேடும் பணிகளில் மோப்ப நாய்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அப்புத்தளை நகரில் இரு தனியார் வர்த்தக நிலையங்களும் தியத்தலாவையில் வர்த்தக நிலையமொன்றுமாக மூன்று வர்த்தக நிலையங்களிலுமே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளன.
கோடிக்கான ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளன. இது குறித்து அப்புத்தளை மற்றும் தியத்தலாவை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இடம்பெற்ற குறித்த திருட்டு தொடர்பாக அப்புத்தளை தியத்தலாவை பொலிஸார் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM