நெதர்லாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் கடந்து 2012 ஆம் ஆண்டு திருடப்பட்ட பிகாசோ ஓவியம் 6 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
எனினும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் குன்ஸ்தல் அருங்காட்சியகத்தில் வைத்து குறித்த 7 ஓவியங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளது.
அதனை தொடர்ந்து புகழ்பெற்ற இவ் ஓவியங்களை கண்டு பிடிப்பதற்கு தனி குழு ஒன்று அமைக்கபட்டு தேடுதல் பணி இடம்பெற்றது.
ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் திருட்டுபோன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் நேற்றைய முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டுபிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.
தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், பிகாசோவின் ஓவியம்தானா? என உறுதிப்படுத்தப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM