பாடசாலை அதிபரினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் பலத்த காயங்களுடன் அப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றுவருகின்றார்.
தாக்குதலில் ஏற்பட்ட காயத்திற்கு கையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் தெரிவித்தார்.
அப்புத்தளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்றுவந்த எஸ். பிரமிளா என்ற மாணவியே கையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வகுப்பறையை கூட்டி சுத்தம்செய்யவில்லை என்ற காரணத்தினால் அதிபருக்கு ஆத்திரம் ஏற்பட்டு இத்தாக்குதளை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதியப்பட்டுள்ளதையடுத்து அப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது வரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM