மதுபானம் குடித்த 6 பெண்கள் உட்பட 24 பேர் பலி

Published By: Robert

23 Mar, 2016 | 09:13 AM
image

பாகிஸ்தானின் தரமற்ற போலி மதுபானம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் டண்டோ முகமது கான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 35 பேர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 6 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் ஏஜெண்ட் ஒருவரின் மூலமாக தரமற்ற போலி மதுபானங்களை வாங்கி அருந்தியதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், போலி மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்க பொலிஸார் தவறிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு போலி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52