கண்டி பல்லேகல இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.
துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ரொஷன் சில்வா 85 ஓட்டங்களையும், திமுத் கருணரத்ன 63 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 46 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸின் வெற்றியிலக்காக 301 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை. இங்கிலாந்து. வெற்றி இலக்கு 301. 2 வது இன்னிங்ஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM