முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.இச் சம்பவம் பற்றி தெரியவருகையில்,
முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 வயதுடைய சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அயல் வீட்டில் இருந்த 13 வயதுடைய சிறுவனும் 74 வயதுடைய சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த (14.11. 2018 ) அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் உறுப்பு வேதனையால் தவித்த போது கடந்த ( 15.11.2018) அன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு தாயார் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி தங்கி நின்ற வீட்டில் உள்ள 13 வயதுடைய சிறுவன் மற்றும் அவனது 74 வயதுடைய தந்தை ஆகியோர் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முள்ளியவளை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் சம்பவத்தை ஒத்துக்கொண்டுள்ளதை தொடர்ந்து குறித்த சிறுவனையும் சிறுவனின் தந்தையையும் கைதுசெய்த பொலிசார் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM