வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகரினால் பரிசோதனை நடாத்தப்பட்டபோது பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது நீதிமன்றத்தினால் 34 ஆயிரம் ரூபாய் தண்டம் இன்று அறவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் பொது சுகாதாரப்பரிசோதகரின் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வர்த்தக நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள், காலாவதிமுடிவடைந்த உணவுப் பொருட்கள், வண்டு மொய்த்த உணவுத்தானியங்கள், பூஞ்சனம் பிடித்த கருவாடுகள், எலி வெட்டிய பிஸ்கட் பைகள் என்பன விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை அவதானித்து குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகரினால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் வழங்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை மேற்கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஜவருக்கும் எதிராக 34ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் மேலும் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM