கம்போடியாவின் போல்பொட் அரசாங்கத்தின் இரு தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என ஐக்கியநாடுகள் ஆதரவுடனான கெமர்ரூஜ் தீர்ப்பாயம் வரலாற்று தீர்ப்பளித்துள்ளது.
நுவன் சீ (92) கியுசம்ஹன் ஆகியோரே இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
கம்போடியாவின் சாம் முஸ்லீம்கள் மற்றும் வியட்நாமியர்களிற்கு எதிராக இவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
கெமரூஜ் அரசாங்கத்தின் இரு முன்னாள் அதிகாரிகளிற்கும் இனப்படுகொலைக்காக ஆயுள்தண்டனையை தீர்ப்பாயம் வழங்கியுள்ளது.
இருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இருவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் நிலையிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் கெமரூஜ் அரசாங்கம் இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பது முதல் முறையாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1975 முதல் 1979 வரையான காலப்பகுதியில் கெமரூஜ் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM