மறைந்த தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை டிசம்பர் 16 ஆம் திகதியன்று திறக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
“ மறைந்த தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை வருகின்ற அடுத்த மாதம் 16 ஆம் திகதியன்று அகிய இந்திய தலைவர்கள் பங்குபற்றி சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள்.
ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தமிழகத்துக்கு மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்படவுள்ளது.
இந்த சிலையுடன் புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் ஒரேயிடத்தில் அருகருகே அமையவிருக்கின்றன. டிசம்பர் 16 ஆம் திகதி தலைவரின் முழு உருவச்சிலை திறப்பு விழா எழுச்சி மிகு விழாவாக நடைபெறும்.’ என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கருணாநிதியின் முழு உருவச்சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருமதி சோனியா காந்தி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM