கருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி கருணாநிதியின் சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உட்பட தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக கருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவரது சமாதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியின் மீது தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் கருணாநிதி இருப்பது போன்ற ஓவியம் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது.
சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. முரசொலி நாளிதழ் ‘லேமினேசன்’ செய்யப்பட்டு சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.
கருணாநிதி சமாதிக்கு நேற்று அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு, மு.க.ஸ்டாலினின் சொந்த செலவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உணவு பொதிகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய படத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கருணாநிதி நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM