பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்களின் சம்பள பணத்தை தோட்ட நிர்வாகம் கொள்ளையிட்டதாக தெரிவித்து தோட்டமக்கள் ஆர்ப்பாட்டம்.மடுல்சிமை பெறுந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்களின் சமபளத்தில் இரண்டு இலட்ச்சத்து அறுபது ஆயிரம் ரூபா பணத்தை தோட்ட நிர்வாகம் கொள்ளையிட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 08மணி முதல் காலை 10.30 மணி வரை கெர்க்கஸ்வோல்ட் தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டதை முன்னெடுத்தனர்.
கடந்த மாதம் தோட்ட நிர்வாகத்தால் நாள் ஒன்றுக்கு நல்ல தேயிலை கொழுந்து ஜந்து கிலோ பறித்தால் ஒரு கிலோவிற்க்கு 05ருபா படி தருவதாக தோட்ட நிர்வாகம் கோரியிருந்தது.இந்நிலையில் மாதாந்தம் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் பெறும் பொழுது சம்பளத்தினை பெறும் ஒரு நாளைக்கு முன்பாக தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பற்றுசீட்டை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஆனால் இம்முறை தீபாவளி பண்டிகை இருந்தமையினால் குறித்த தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை கடந்த 05ம் திகதி வழங்கி விட்டு சம்பள பற்றுசீட்டை இன்று காலை வழங்கியதாகவும் பறித்த நல்ல தேயிலை கொழுந்திற்கான சம்பளமும் ஞாயிற்றுகிழமை நாட்களில் தொழில் புரிந்த தொழிலாளர்களுக்கு ஒன்னரை நாளுக்கான சம்பளம் வழங்கபடவில்லை என மேலதிக மாக தொழிலாளர்களால் பறிக்கபட்ட பச்சை தேயிலை கொழுந்திற்கான மொத்த பணம் கொள்ளையிடபட்டமைக்கு எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த ஆரப்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தவிடயம் தொடர்பாக கெர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்திற்திடம் வினவிய பொழுது குறித்த கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்களால் பறிக்கபட்ட ஜந்து கிலோ நல்ல பச்சை கொழுந்திற்கு 260000ருபா வழங்கபட இருக்கிறது இது எங்கள் தவறு அல்ல இது கம்பணிகளின் தவறு எனவே இன்னும் இரண்டு தினங்களில் அதனை சரிசெய்து மக்களிடம் கையளிக்கபட உள்ளதாக தோட்ட உதவி முகாமையாளர் ஒருவர் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்திய பிறகு மக்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து சென்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM