இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பல ரொக்கெட் குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது.
அதில் பலர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார்.
இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கியது. விண்ணில் பறந்து சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் காஸா மீது பறந்து 70 நிலைகள் மீது குண்டு வீசியது.
இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகிதோடு. 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் பலியானதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதல் காரணமாக காஸா மற்றும் தென் இஸ்ரேல் பகுதியில் கரும் புகை எழுந்த வண்ணம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் வாழும் மக்கள் வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கெட் வீச்சில் இஸ்ரேலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அதே போன்று பாலஸ்தீனத்தின் காஸாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM