பாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக முழுமையாக நிதியளிக்கப்பட்ட உயர் கல்வி புலமைப் பரிசில்கள் ஒன்பதினை இலங்கை மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
பாகிஸ்தானிய அரசின் இலங்கைக்கான தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் கீழ் மருந்தியல் மற்றும் பொறியியல் துறைகளில் உயர் கல்வியினைத் தொடர்வதற்கு இப் புலமை பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷhஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை உயர் ஸ்தானிகர் பணியகத்திலே சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மக்களின் மேம்பாட்டிற்கான இரு நட்புநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை இதன்பொழுது பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
மேலும் இலங்கை மாணவர்கள் தங்களது உயர் கல்வியினைத் தொடர்தல் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையில் இருதரப்பு தொடர்பாடல் மற்றும் புதிய தொழில்சார் உறவினை உருவாக்குதல் இப் புலமைப்பரிசில் அன்பளிப்பின் நோக்கமாகுமென உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலதிகமாக பாகிஸ்தானிய அரசு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் இலங்கையின் சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசிலினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM