தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கோத்தா கருத்து 

Published By: R. Kalaichelvan

13 Nov, 2018 | 02:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு  சர்வதேச அமைப்புக்கள் , வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஜனநாயக மீறல்களை சர்வதேசங்கள் அவதானிக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும் என  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எலிய அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்தி  2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

எமது நாட்டின் உள்ளக விவகாரங்களை தீர்த்துக்கொள்ள மக்களின் ஆணையினை நாடுவதை எவ்வாறு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட முடியும். ஜனநாயகம் என்ற சொற்பதத்தினை தமக்கு ஏற்றாற்போல் சர்வதேசங்கள் மாற்றியமைத்துள்ளன எனவும் தெரிவித்தார்.

நாட்டின் ஆட்சி மாற்றம்  மக்களின்   தேவைகளுக்காக மாத்திரமே இடம்பெற்றுள்ளது. 

அரசியல்  தொடர்பில் நெருக்கடிகள்  காணப்படும் பட்சத்தில் மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பதே சிறந்த தீர்வாகும். 

அரசியல் நெருக்கடிகளுக்கு மக்களின் ஆணையினை நிச்சயம் மதிக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு தொடக்கம்  அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளன. 

தற்போது மாத்திரம் அரசியலமைப்பு மீறல் என்று எவரும் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது .

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையினை  மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார். 

இருப்பினும் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. வெறும் 47 ஆசனங்களை பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைமைத்துவத்திற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை மாத்திரம் அரசியலமைப்பிற்கு சரியானதா என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30