(எம்.மனோசித்ரா)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்துடன் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவும் இணைந்து ஐ.ம.சு. கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னமான கை சின்னத்திலோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்திலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திலோ நாம் களமிறங்கப்போவதில்லை.
உரிய கலந்துரையாடல்களின் பின்னர் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதில் போட்டியிட்டு பாரிய வெற்றியையும் உறுதிசெய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM