மைத்திரி - மஹிந்த கூட்டணி குறித்து புதிய தகவலை வெளியிட்ட அமரவீர

Published By: Vishnu

13 Nov, 2018 | 02:36 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்துடன் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவும் இணைந்து ஐ.ம.சு. கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னமான கை சின்னத்திலோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்திலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திலோ நாம் களமிறங்கப்போவதில்லை. 

உரிய கலந்துரையாடல்களின் பின்னர் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதில் போட்டியிட்டு பாரிய வெற்றியையும் உறுதிசெய்வோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்