மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை சாலம்பன் சேனையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நான்கு யானைகளின் சடலங்கள் நீரோடையில் காணப்படுவதாக பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இவ் யானைகள் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.யானைக் கூட்டம் வழக்கமாக மேற்குறித்த பிரதேசத்திலுள்ள நீரோடையினை கடந்து அருகிலுள்ள பிரதேசங்களான புணானை,வாகரை,கிருமிச்சை,ஆலங்குளம் போன்ற கிராமங்களுக்கு செல்வது வழக்கமாகும்.
வெள்ளம் ஏற்பட்ட வேளை யானைகள் சில இவ் நீரோடையினை கடந்து மறுபக்கம் சென்றுள்ளதாகவும் ஏனைய யானைகள் கடந்து செல்லமுற்ப்பட்ட வேளை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்குறித்த யானைகளை காணாது ஏனைய யானைகள் அன்றைய தினம் பிரதேசத்தில் தங்கி நின்று சத்தம் எழுப்பிய நிலையில் தேடும் பணியில் ஈடுபட்டு திரிந்ததாகவும் இது தங்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.
குறித்த யானைகள் நீரோடையில் விழுந்து அழுகிய நிலையில் காணப்படுவதானால் நீர் மாசுபடுவதுடன் பிரதேசத்தின் சுகாதாரத்திற்கு தீங்காகவுள்ளதாக தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அவற்றினை குறித்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM