கிளிநொச்சி, கிராஞ்சி இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்படடிருந்த இந்திய இழுவைப்படகுகளை கரைக்குக் கொண்டு வந்துள்ளமையால் மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொள்வதிலிருந்த தடங்கல் நீங்கியுள்ளதாக கிராஞ்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 35 இற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் நீதிமன்றக் கட்டளைகளுக்கு அமைவாக இதுவரை காலமும் கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி, இலங்குடா சிறு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் நிறுத்திவைக்கப்படடிருந்தன.
இதனால் இந்திய இழுவைப்படகுகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்க்கசிவுகள் மற்றும் படகுகளை நிறுத்திவைத்திருந்தமை காரணமாக சுமார் 59 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே குறித்த படகுகளை அகற்றி தொழில் செய்யக்கூடிய சூழலை உருவாக்கித்தருமாறு கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதேவேளை பூநகரிப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சிறுகடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேற்படி இந்திய இழுவைப்படகுகளை கடற்கரையோரத்தில் இழுத்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு விடப்பட்டுள்ளதனால் குறித்த கடற்பகுதியில் கடற்தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக உள்ளது என்றும் கடற்தொழிலாளர்களும் கிளிநொச்சி கிராஞ்சி கடற்தொழிலாளர் சங்க நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM