“உங்கள் மீது எனக்கு எந்த கோவமும் இல்லை, ஆனால் மஹிந்தவோடு இனைந்து வேலை செய்ய என் மனசாட்சி ஒரு போதும் இடம் கொடுக்காது” என முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாலித ரங்கே பண்டாரவிற்கு தொலை பேசி அழைப்பை மேற்கொண்டு பாலித ரங்கே பண்டாரவை சந்தித்து பேச வேண்டும் என கூறியதற்கே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த தொலை பேசி உரையாடலில் ஜனாதிபதி பாலித ரங்கேவிடம் “நாங்கள் நாளை சந்திப்போமா?” என கேட்க அதற்கு பாலித ரங்கே பண்டார “சந்திக்கலாம் ஐயா! ஆனால், ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் தான் உங்களை நான் தொடர்பு கொள்ளவும் இல்லை சந்திக்க முயற்சிக்கவும் இல்லை, சொல்வதற்கு மன்னிக்கவும்,
எனக்கு உங்கள் மீது எந்த கோவமும் இல்லை, ஆனால் எனது உள்ளத்தில் எந்தவொரு இடத்திலும் மஹிந்தவோடு இனைந்து வேலை பார்ப்பதற்கான எண்ணம் இல்லை.
தொடர்ந்து மஹிந்தவிற்கு எதிராக செய்ற்பட்டோம், அவரது செயற்பாடு குறித்து நாமெல்லாம் விமர்சித்துள்ளோம். அதனால் என் மனசாட்சி ஒரு போதும் இடமளிக்காது” என கூறியுள்ளார்.
அதற்கு ஜனாதிபதி “பரவாயில்லை நாங்கள் சந்திப்போமே சந்தித்து பேசுவோமே” என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
குறித்த தொலைபேசி உரையாடலை ஐக்கிய தேசிய கட்சி தனது உத்தியோகபூர்வ முகநூல் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM