இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகமவுடனான சந்திப்பை எட்டு மேற்குலக நாடுகள் புறக்கணித்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் சரத்அமுனுக சந்திப்பொன்றிற்காக 43 நாடுகளின் பிரதிநிதிகளிற்கு அழைப்பை விடுத்திருந்த போதிலும் மிக்குறைந்த அளவு வெளிநாட்டு இராஜதந்திரிகளே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரிட்டன் பிரான்ஸ் நெதர்லாந்து நோர்வே அவுஸ்திரேலிய கனடா தென்ஆபிரிக்கா இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை சீனா பாக்கிஸ்தான் கியுபா உட்பட 20 நாடுகளின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்தும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் குறித்தும் மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுவந்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM