\நிமோனியா எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோயை தடுக்க அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது தான் நல்லது என அனேக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12 ஆம் திகதியை ‘உலக நிமோனியா தினமாக’ உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நெஞ்சு சளி சார்ந்த நோயான நிமோனியா முதன்மையான காரணமாக உள்ளது. முதியவர்களின் இறப்பைப் பொருத்தவரை மாரடைப்பு, பக்கவாதத்திற்கு அடுத்தப்படியாக மூன்றாவது காரணமாக நெஞ்சு சளி சார்ந்த நோயான நிமோனியா உள்ளது.
நெஞ்சு சளி சார்ந்த நோய் பாதிப்பு எனப்படும் நிமோனியா நோய் பாதிப்பு, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்களால் ஏற்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் சர்க்கரை நோய், புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், ஆஸ்துமா, நாள்பட்ட நெஞ்சு சளி பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், ஸ்டீராய்ட் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றின் காரணமாகவும் இந்த நெஞ்சு சளி சார்ந்த நோய் பாதிப்பான நிமோனியா வருவதற்கு வாய்ப்புண்டு.
இருமல், சளியோடு சேர்ந்த இருமல், காய்ச்சல், உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
மார்பகப் பகுதியை எக்ஸ் ரே எடுத்து பரிசோதித்தல், ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலம் இதனை உறுதிப்படுத்தலாம்.
நிமோனியாவை தடுப்பூசி மூலம் தடுக்க இயலும். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரேயொரு முறை நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. முதியவர்களுக்கு இத்தகைய தடுப்பூசி போட்டுக் கொள்வதால், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு வருவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கும் தடுப்பூசி அட்டவணைப் படி நிமோனியா தடுப்பூசி போட்டுவிடுவது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM