தனது சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தன்னிடமும் தவறாக நடக்க முயன்ற தந்தையை, அவரின் மகள் தீ வைத்து எரித்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் காராச்சி நகரில் பிராபத் எனும் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது மகள்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பயத்தின் காரணமாக அதை அவர்கள் வெளியே சொல்லவில்லை. இதைக்கண்டு கோபமடைந்த அவரின் இரண்டாவது மகள் ஆயிஷா, தனது தந்தையை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன்படி, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தார். அவர் நன்றாக தூங்கியதும், அவரை தரதரவென இழுத்துச் சென்று தீ வைத்து எரித்து விட்டார். அதன்பின் ஆயிஷா பொலிஸாரிடம் சரண் அடைந்தார்.
இதுபற்றி ஆயீஷா பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “என் தந்தை எனது மூத்த மற்றும் இளைய சகோதரிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். என்னையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதனால்தான் அவரை எரித்துக் கொன்றேன்” என்று கூறியுள்ளார்.
இதனால், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆயிஷா, கராச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM