தனது 2 வயது மகளை சமையலறை ஒவன் உபகரணத்தில் வைத்து கடும் எரிகாயத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை இடம் பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிளன் ரோஸ் நகரைச் சேர்ந்த தஷா ஹட்சர் (35 வயது) என்ற மேற்படி பெண், தனது சின்னஞ்சிறு மகளை ஒவன் உபகரணத்துக்குள் வைப்பதை அவதா னித்த ஒருவர் அது தொடர்பில் பொலி ஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு உட னடியாக வந்த பொலிஸார் குழந்தையை ஒவன் உபகர ணத்திலி ருந்து வெளி யில் எடு த்து மருத்துவ மனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததுடன் தஷாவை கைதுசெய்துள்ளனர்.
அந்தப் பெண் எதற்காக மேற்படி கொடூர நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி யிடப்படவில்லை.
கடும் எரிகாயங்களுக்கு உள்ளான குழந்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM