நாளை கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தம்.!

Published By: Robert

22 Mar, 2016 | 10:52 AM
image

பாகிஸ்தானில், தேசிய தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளின் போது, பாகிஸ்தான் ஆயுதப்படையின் பிரமாண்ட அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதனால், பாதுகாப்பு காரணம் கருதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதேபோன்று, தேசிய விழா நடைபெறும் நாளை கையடக்கத்தொலைபேசி சேவைகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47