மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57, 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 242 குடும்பங்களைச் சேர்நத 691 நபர்கள் 3 முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறு மூலை வளாகத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2, 296 குடும்பங்களைச் சேர்ந்த 8, 564 நபர்களும கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1, 166 குடும்பங்களைச் சேர்ந்த 4, 075 நபர்களும், கோறளைப்பற்று செயலாளர் பிரிவில் 924 குடும்பங்களைச் சேர்ந்த 2, 989 நபர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 2, 916 குடும்பங்களைச் சேர்ந்த 9, 877 நார்களும்,
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1646 குடும்பங்களைச் சேர்ந்த 5853 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4, 260 குடும்பங்களைச் சேர்ந்த 13, 923 நபர்களும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 486 குடும்பங்களைச் சேர்ந்த 1, 669 நபர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1, 592 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 546 நபர்களும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 604 குடும்பங்களைச் சேர்ந்த 2, 167 நபர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1, 112 குடும்பங்களைச் சேர்ந்த 3, 670 நபர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1, 037 நபர்களும், மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 294 நபர்களும், போரதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 795 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் காரணமாக இதுவரை 27 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM