முப்படையினரின் பிரதான விளையாட்டுப் போட்டியாகிய 2018 பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் நிறைவு வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பனாகொட இராணுவ குடியிருப்பு மைதானத்தில் நேற்று பிற்பகல் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை முப்படையினர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.
10ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியானது, முப்படையினரின் திறமைகளை வெளிகொண்டு வருவதற்கும், அவர்களுக்கிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
பெட்மின்டன், கரப்பந்து, கிரிகெட், படகு போட்டி, கால்பந்து உள்ளிட்ட 36 வகையான போட்டிகள் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவில் 2500க்கும் மேற்பட்ட முப்படை வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன், இவ்விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை இலங்கை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விளையாட்டு விழா பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், போட்டியின் வெற்றியாளர்களான இலங்கை இராணுவத்தினருக்கு ஜனாதிபதியினால் வெற்றி கிண்ணம் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் நிறைவுக்கான பிரகடனத்தையும் ஜனாதிபதி இதன்போது வெளியிட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கப்பற் படை தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM