இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பாரளுமன்றம் ஜனாதியால் கலைக்கப்பட்டுள்ளது.யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பதை நிரூபிக்க உடனடியாக பாராமன்றத்தை கூட்டுமாறு 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் உலக நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தன.
இலங்கை அரசியல் அமைப்பின் 19ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது என்றாலும், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் அமைப்பின் 33 (2) அ பிரிவின் கீழ் பாராளுமன்றத்தை நேற்றிரவு கலைத்துள்துள்ளார்.
இதனால் கொழும்பில் அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் இம்மாதம் 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் ஜனவரி 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் எனவும் ஜனாதிபதி வெளியிட்டுள் வர்த்மானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த அதிரடி முடிவால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் அதிருப்பதிக்குள்ளாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி உயர் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததையடுத்தே நாட்டில் அரசியல் ஸ்த்திரமற்ற தன்மை ஏற்பட்டது.
மேலும் ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதா என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றை நாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM