10 அணிகள் பங்குபற்றும் 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு 20 உககக் கிண்ணத் தொடர் இன்று மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மற்றம் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
அதன்படி மேற்கிந்தியத் தீவுகளில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் குழு ‘பி’ பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தாங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும், லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் பட்டியில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
சர்வதேச பெண்களுக்கான இருபதுக்கு 20 கிண்ணத்தை இதுவரை அவுஸ்திரேலிய அணி மூன்று முறையும் (2010, 2012, 2014), இங்கிலாந்து அணி ஒரு முறையும் (2009), மேற்கிந்தியத் தீவுகள் அணி (2016) ஒரு முறையும் கைப்பற்றியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM