ஹல்துமுள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட ஒருவரை மரக்குற்றிகளுடன் கைதுசெய்துள்ளதாக ஹல்துமுள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் இந்திக்க ஜயசிங்கவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பிரதேச செயலாளர், ஹல்துமுள்ளை பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே லொறியென்றில் அடுக்கி வைக்கப்பட்ட மரக்குற்றிகளையும், லொறியையும் பொலிஸார் கைப்பற்றியதுடன், லொறியின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் வாகனத்திற்கான அனுமதிப்பத்திரமும் இல்லாததுடன் மரக்குற்றிகளை ஏற்றிச் செல்வதற்கும் அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லை என்பதும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து, ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM