சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது

Published By: Vishnu

09 Nov, 2018 | 11:39 AM
image

ஹல்துமுள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்  செல்ல முற்பட்ட ஒருவரை மரக்குற்றிகளுடன் கைதுசெய்துள்ளதாக ஹல்துமுள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் இந்திக்க ஜயசிங்கவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பிரதேச செயலாளர், ஹல்துமுள்ளை பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே லொறியென்றில் அடுக்கி வைக்கப்பட்ட மரக்குற்றிகளையும், லொறியையும் பொலிஸார் கைப்பற்றியதுடன், லொறியின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் வாகனத்திற்கான அனுமதிப்பத்திரமும் இல்லாததுடன் மரக்குற்றிகளை ஏற்றிச் செல்வதற்கும் அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லை என்பதும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து, ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59