பிரேசில் நாட்டில், சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கொங்கிறீற்றால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளம்பெண் மார்சியா மிராண்டாவின் சடலமானது அவர்களது வாடகை குடியிருப்பில் புதிதாக கட்டிய உள் முற்றத்தில் 2 மீற்றர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி முதல் மிராண்டாவை காணவில்லையென தெரியவருகிறது. சம்பவத்தன்று தமது இரு பிள்ளைகள் பேரில் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் தமது மாமியார் மற்றும் மாமனாரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக தாங்கள் வாங்கிய குடியிருப்பு மற்றும் நிலத்தை பார்வையிட மிராண்டாவை அவர்கள் நிர்பந்தித்து அழைத்துள்ளனர்.
அவர் கொண்டுவந்த காரில் மிராண்டாவுடன் சாவ் பாலோ நகரில் உள்ள அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.
ஆனால், மிராண்டாவை கொலை செய்து புதைப்பதற்கு என்றே அந்த குடியிருப்பு மற்றும் நிலத்தை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வின் உடலை கைப்பற்றும்போது அது மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்து இருந்தது. மிராண்டாவின் விரல் அடையாளங்களே அவரை அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரை பிரிந்திருந்த மார்சியா மிராண்டாவின் இரு பிள்ளைகள் மீதும் தற்போது கைது செய்யப்பட்ட மரியா ஐசில்டா(60) மற்றும் பெர்னாண்டோ டி ஒலிவேரா(62) ஆகிய இருவருக்கும் ஆசை இருந்து வந்துள்ளது.
மட்டுமின்றி பிள்ளைகளிடம் தாய், தந்தை என்றே அழைக்கவும் அந்த தம்பதி அறிவுறுத்தியுள்ளதோடு, அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்த்தவே முதியவர்களான அந்த தம்பதி திட்டமிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM