(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட இந்த புதிய அரசாங்கமே தொடரும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - மஹிந்தராஜபக்ஷ இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது அநாவசியமானது என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சில் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தை எந்தவொரு கட்சியும் எடுக்க முடியாது. காரணம் பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு இணங்கவும், அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு இணங்கவுமே செயற்படும். 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுக்கான ஒழுங்கு பத்திரம் தயாரிக்கப்படும். அதன்படியே அன்றைய அமர்வுகள் இடம்பெறும். இதனை சபாநாயகர் தீர்மானிப்பார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM