"2,218 சிங்களவர்கள் மீள்குடியேற்றம்''

24 Nov, 2015 | 12:24 PM
image

சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றனவே தவிர சட்டரீதி­யான குடி­யேற்­றங்­க­ளுக்கு எதி­ராக எது­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 719 குடும்­பங்­களைச் சேர்ந்த 2,218 சிங்­கள மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் அறிவித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.கட்­சியின் மாத்­தறை மாவட்ட எம்.பி. புத்­திக பத்­தி­ரன எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளித்­த­போதே அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தன­து­ பதிலில்;

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மொத்த சனத்தெகை 5 இலட்­சத்து 82 ஆயிரத்து 323 ஆகும்.

இதில் 3 ஆயி­ரத்து 306 பேர் சிங்­கள மக் கள் ஆவார்கள். இவ் எண்­ணிக்­கையில் 961 குடும்­பங்­களைச் சேர்ந்த 3288 பேர் இடம்­பெ­யர்ந்­துள்ள நிலையில் அவர்­களில் 719 குடும்­பங்­களைச் சேர்ந்த 2218 பேர் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

இம்­மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பாகு­பாடும் இல்­லாமல் அரச உத­விகள், சேவைகள் வழங்­கப்­ப­டு­கி­றது.

சட்­ட­வி­ரோ­த­மான ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சட்ட ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வி­த­மான இடை­யூ­று­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. யுத்­தத்தால் வீடு­களை இழந்­த­வர்­களின் தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு பிர­தேச செய­லக மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் தக­வல்கள் பேணப்­ப­டு­கி­றது.

சுய­வி­ருப்பின் பேரில் மீள் குடி­யேற வந்த இடம்­பெ­யர்ந்த சிங்­கள குடும்­பங்கள் அவர்­களின் நிரந்­தர இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன.

இவர்­க­ளுக்கு எவ்­வி­த­மான பார­பட்­சமும் இன்றி அடிப்­படை வச­திகள் படிப்­ப­டி­யாகச் செய்து கொடுக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­தோடு காணி ஆணை­யா­ள­ரினால் 15.11.2013 ஆம் திக­தி­யன்று வெளி­யி­டப்­பட்ட பத்­தி­ரிகை விளம்­பரம் வழங்­கப்­பட்­டது.

இடம்­பெ­யர்ந்த மக்­களின் காணிப்­பி­ணக்­கு­களைத் தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­துடன் சுய­வி­ருப்பின் பேரில் மீள் குடி­யேற விரும்­புவோர் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றனர்.

இங்கு குடி­யேற்­றப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அரச கொள்­கைக்கு அமைய மீள் குடி­யேற்றக்கொடுப்பனவு உட்பட இதர வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது என்றார்.

அதேவேளை புத்திக பத்திரண எம்.பி. யின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அங்குள்ள தேரருடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02